புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஜான்சன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சந்தானம், அனைகா மற்றும் பலர் நடிக்கும் படம் 'பாரிஸ் ஜெயராஜ்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்தார் படத்தின் இயக்குனர் ஜான்சன். மேடையில் பேசும் போது அடிக்கடி 'நான் வொர்த்தே இல்லை' என்ற வார்த்தையை அடிக்கடி கூறி ஏதேதோ உளறினார். அவர் பேசியது எதுவுமே பத்திரிகையாளர்களுக்குப் புரியவில்லை.
ஒரு கட்டத்தில் இந்தப் படமும் வொர்த் இல்லை என்று வேறு பேசி அதிர்ச்சியைக் கொடுத்தார். படத்தில் என்னைத் தவிர அனைவரும் வொர்த் ஆனவர்கள் தான் என்றார்.
படத்தை முடித்த உடன் அவருக்கும், சந்தானத்திற்கும் ஏதோ பிரச்சினை நடந்திருக்கிறது. ' வொர்த் இல்லை' என்ற வசனத்தை சந்தானத்தின் படங்களில் அடிக்கடிப் பார்க்கலாம். அதனால், அந்த வார்த்தையைக் குறிப்பிட்டு அவர் இயக்குனரைத் திட்டியிருக்கலாம் என்கிறார்கள். அதனால்தான், மேடையில் அந்த வார்த்தையை அவர் அடிக்கடி பயன்படுத்தி இருக்கிறார்.
ஜான்சன் இயக்குனராக அறிமுகமான சந்தானம் நடித்த 'ஏ 1' படமும் வெற்றி பெற்ற படம்தான். இந்த 'பாரிஸ் ஜெயராஜ்' படமும் நன்றாக வந்திருப்பதாகவே தெரிவிக்கிறார்கள். அப்படியிருக்க இயக்குனர் எப்படிப்பட்ட மன உளைச்சலில் அப்படி பேசியிருப்பார் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. நேற்றைய பிரஸ் மீட்டில் அவர் 'போதை'யுடன் வந்துள்ளதாகத் தெரிகிறது. ஒரு வழியாக அவரை சந்தானம் அமைதிப்படுத்தி அவரை உட்கார வைத்தார்.
இயக்குனர் ஜான்சன் உளறிக் கொட்டிய பேச்சின் வீடியோ நேற்று யு டியுபில் பரபரப்பை ஏற்படுத்தியது. என்னதான் பிரச்சினை இருந்தாலும் தான் சம்பந்தப்பட்ட படத்தின் நிகழ்ச்சிக்கு ஒரு இயக்குனர் அப்படி வந்தது மாபெரும் தவறு என திரையுலகத்திலேயே தெரிவிக்கிறார்கள்.