எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் அக்டோபர் மாதம் முதல் படிப்படியாகத் திறக்கப்பட்டன. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதையே மாநில அரசுகளும் பின்பற்றின. இந்த மாதம் முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு முதலில் அனுமதி வழங்கியது. அதையடுத்து தென்னிந்தித் திரையுலகத்தில் உள்ள மற்ற மொழி திரையுலகினரும் அந்தந்த மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கின. கேரளா அரசு பிப்ரவரி மாதம் முழுவதும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்றது-. தற்போது தெலங்கானா அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கேரளாவைத் தவிர மற்ற தென்னிந்திய மாநிலங்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து பலரும் தங்களது படங்களை வெளியிட ஆலோசித்து வருகின்றனர். கடந்த வருடங்களில் வெளிவராமல் முடங்கிப் போன பல படங்கள் அடுத்த சில மாதங்களில் தொடர்ச்சியாக வெளிவர உள்ளன.