'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவில் புதிய படங்கள் வெளியாகும் போது அவற்றிற்கு சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து அரசாணை பிறப்பிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
பவன் கல்யாண் நடித்து கடந்த வாரம் வெளியான 'ஓஜி' படத்திற்கு அப்படியான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தெலுங்கானா அரசு வெளியிட்ட ஆணையை எதிர்த்து ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி வழக்கை அடுத்த மாதத்திற்குத் தள்ளி வைத்தார்.
இதனிடையே, டிக்கெட் கட்டண உயர்வுக்காக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. அதனால், பழைய கட்டணத்தில் ரசிகர்கள் இனி அப்படத்தைப் பார்க்க முடியும். இன்று முதல் அது அமலுக்கு வருகிறது.
எதிர்வரும் காலங்களில் புதிய படங்களுக்கு டிக்கெட் கட்டண உயர்வு அளிப்பதை தெலங்கானா அரசு கைவிடும் எனத் தெரிகிறது.