டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் கடந்த மாதம் ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. 50 சதவீத இருக்கைகளுடன் வெளிவந்த இந்தப் படம் வட இந்திய மாநிலங்களைத் தவிர உலகம் முழுவதும், தென்னிந்தியாவிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
கொரோனா தொற்றால் தியேட்டர்கள் பக்கம் வராமல் இருந்த மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைத்ததில் 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே முக்கிய பங்குண்டு. கடந்த ஜனவரி 29ம் தேதி ஒடிடி தளத்திலும் 'மாஸ்டர்' வெளியானது. இருப்பினும் பல ஊர்களில் தியேட்டர்களிலும் இன்னும் மக்கள் வந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நாளையுடன் படம் வெளிவந்து 25 நாளாகப் போகிறது. இந்த 25 நாட்களில் படம் 250 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கை ஏற்படுத்தி வருகின்றனர்.
50 சதவீத இருக்கைகளிலேயே 250 கோடி ரூபாய் வசூல் என்பது சினிமா வியாபாரத்தில் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. ஓடிடி தளத்தில் மட்டும் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் 300 கோடி ரூபாய் வசூலைக் கூடத் தொட்டிருக்கும் என்கிறார்கள்.




