மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகை நதியா திரையுலகில் நுழைந்து 37 வருடங்கள் ஆகின்றன. இவரை மலையாளத்தில், “நோக்கத்தே கண்ணெட்டும் தூரத்து' என்கிற படம் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாசில். அந்தப்படத்தை தமிழில் 'பூவே பூச்சூடவா' என ரீமேக் செய்தபோதும் நதியாவே நடித்தார். இந்த இரண்டு படங்களை தொடர்ந்து நதியாவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது. நேற்று தனது குருவான பாசிலின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் நதியா.
தனது சோஷியல் மீடியா பக்கத்தில், பூவே பூச்சூடவா படத்தில் பணிபுரிந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள நதியா இதுகுறித்து கூறும்போது, “இயக்குனர் பாசில் என்னைப் பொறுத்தவரை எப்போதுமே பாசில் அங்கிள் தான்.. மிகப்பெரிய பொழுதுபோக்கு உலகத்திற்குள் நுழையும் விதமாக என் கண்களை திறந்து விட்டவர். 17 வயதில் சாதாரண ஜரீனாவாக இருந்த என்னை நதியாவாக மாற்றினார்.. அவரது இயக்கமும் வழிகாட்டுதலும் தான் ரசிகர்கள் மனதில் பதியும் விதமான கதாபாத்திரங்களை எனக்கு கிடைக்க செய்தது” என நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.