நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் |
நடிகை நதியா திரையுலகில் நுழைந்து 37 வருடங்கள் ஆகின்றன. இவரை மலையாளத்தில், “நோக்கத்தே கண்ணெட்டும் தூரத்து' என்கிற படம் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாசில். அந்தப்படத்தை தமிழில் 'பூவே பூச்சூடவா' என ரீமேக் செய்தபோதும் நதியாவே நடித்தார். இந்த இரண்டு படங்களை தொடர்ந்து நதியாவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது. நேற்று தனது குருவான பாசிலின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் நதியா.
தனது சோஷியல் மீடியா பக்கத்தில், பூவே பூச்சூடவா படத்தில் பணிபுரிந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள நதியா இதுகுறித்து கூறும்போது, “இயக்குனர் பாசில் என்னைப் பொறுத்தவரை எப்போதுமே பாசில் அங்கிள் தான்.. மிகப்பெரிய பொழுதுபோக்கு உலகத்திற்குள் நுழையும் விதமாக என் கண்களை திறந்து விட்டவர். 17 வயதில் சாதாரண ஜரீனாவாக இருந்த என்னை நதியாவாக மாற்றினார்.. அவரது இயக்கமும் வழிகாட்டுதலும் தான் ரசிகர்கள் மனதில் பதியும் விதமான கதாபாத்திரங்களை எனக்கு கிடைக்க செய்தது” என நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.