யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு கோவில் கட்டுவதற்கு முன்பாகவே ஒரு நடிகையின் பெயரால் ஆடை அணிகலன்கள் பிரபலமானது என்றால் அது நடிகை நதியாவின் வரவுக்கு பின்பு தான். நடிப்புக்கு தீனி போடுகின்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக தன்னை பதிவு செய்து கொண்டவர் நதியா. இவர் மலையாளத்தில் முதன்முறையாக இயக்குனர் பாசில் இயக்கத்தில் 1984ல் நோக்கத்த தூரத்து கண்ணும் நட்டு என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
பாட்டிக்கும் பேத்தியும் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தி உருவான முதல் படம் என்று கூட இதை சொல்லலாம். தனது முதல் படத்திலேயே மோகன்லால் மற்றும் பத்மினி போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்ற நதியா இந்த பிப்ரவரி மாதத்தில் தனது 40 வருட திரையுலக பயணத்தை வெற்றிகரமாக கடந்துள்ளார்.
இந்த படம் தான் பின்னர் தமிழில் 1985ல் பூவே பூச்சூடவா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இடையில் சில வருடங்கள் நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்த நதியா தற்போது மீண்டும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் தயக்கமின்றி நடிக்க துவங்கியுள்ளார். குறிப்பாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி மற்றும் தாமிரபரணி ஆகிய படங்கள் அவரது ரீ என்ட்ரிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.