ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1984ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற படத்தில் அறிமுகமான நதியா, அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பரவலாக நடித்து வந்தார். ரஜினியுடன் ராஜாதி ராஜா படத்தில் நடித்த பிறகு திருமணம் செய்து கொண்ட நதியா, திருமணத்திற்கு பிறகும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நானி, நஸ்ரியா இணைந்து நடித்துள்ள அன்டே சுந்தராநானிகி என்ற படத்தில் நதியாவும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். முதன்முதலாக இந்த படத்திற்காக தெலுங்கில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசி இருக்கிறார். இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ள நதியா, நான் டப்பிங் பேசுவதற்கு ஊக்கமளித்த இயக்குனர் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.