டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகைகள் குஷ்பு, ரோஜா ஆகிய இருவரும் 1990 - 2000 ஆண்டுகளில் சினிமாவில் பிசியாக நடித்து வந்தவர்கள். அதோடு வீரம் வெளஞ்ச மண்ணு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக ஆந்திராவில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றிருக்கும் நடிகை ரோஜா, நகரி தொகுதியில் தொடர்ந்து எம்எல்ஏவாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்தபோதே ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அந்த பதவி வழங்கப்படவில்லை. தற்போது ஆந்திர மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்த ஜெகன்மோகன் ரெட்டி புதிதாக நியமித்த அமைச்சர்களில் ரோஜாவையும் ஒரு அமைச்சராக்கி இருக்கிறார். இதையடுத்து ரோஜாவுக்கு திரையுலகத்தில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. நடிகை குஷ்பூ ‛‛ஆந்திரப்பிரதேச அமைச்சராக பதவியேற்ற ரோஜா செல்வமணிக்கு வாழ்த்துக்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.




