நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் : ரவி மோகன் உருக்கம் | பழம்பெரும் நடிகர் சீனிவாசன் காலமானார் | 'பேமிலி' படங்களுக்கு மாறுகிறதா தமிழ் சினிமா? | 'முருகர்' பற்றிய படத்தில் நடிக்கப் போகிறாரா ஜுனியர் என்டிஆர்? | 3 பிஎச்கே : ஒரே மேடையில் வாழ்த்திய 'டிரென்டிங்' இளம் இயக்குனர்கள் | இரு மொழிப் படங்கள்: உஷார் ஆவார்களா தமிழ் நடிகர்கள் ? | டிஜிட்டல் தரத்தில் 'உம்ராவ் ஜான்' - நாளை ரீரிலீஸ் | கார்த்தி படத்தில் நானி? | சிரஞ்சீவி 157வது படத்தில் வெங்கடேஷ்? | தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் எச்.வினோத்! |
ராஜா(மோகன் ராஜா) இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில், ரவி மோகன்(ஜெயம் ரவி), அசின், நதியா, பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் பலர் நடிப்பில் 2004ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'எம் குமரன் S/o மகாலட்சுமி'. தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் வெளிவந்த 'அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி' படத்தின் ரீமேக்காக வெளிவந்த படம்.
ஜெயம் ரவியின் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று. ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கேற்றபடி படத்தை மாற்றியமைத்து சிறப்பான படமாகக் கொடுத்திருந்தார் ராஜா.
20 வருடங்களுக்குப் பிறகு அப்படம் இன்று ரீ-ரிலீஸ் ஆகிறது. படத்தில் ஜெயம் ரவியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நதியா இது குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். “எனக்குப் பிடித்த எம்.குமரன் S/o மகாலட்சுமி… என் வாழ்க்கையில் ஒரு மைல்கல் படம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகிறது. எல்லா வயதினரையும் கவர்ந்த மறக்க முடியாத ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருப்பது உண்மையிலேயே ஒரு இனிய அனுபவமாக இருந்தது” என குழுவினருக்கும் சேர்த்து நன்றி தெரிவித்துள்ளார்.