Advertisement

சிறப்புச்செய்திகள்

''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிரஞ்சீவி படத்திற்காக பிரசாந்த் படத்தை விட்டு விலகிய மோகன்ராஜா

17 ஆக, 2024 - 01:13 IST
எழுத்தின் அளவு:
Mohanraja-left-Prashanth-for-Chiranjeevi


தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன், யோகி பாபு, ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'அந்தகன்'. அப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நேற்று படத்தின் சக்சஸ் மீட் ஒன்றை நடத்தினார்கள்.

அப்போது பேசிய படத்தின் இயக்குனர் தியாகராஜன், “முதலில் இந்தத் திரைப்படத்தை தனிஒருவன் படத்தை இயக்கிய மோகன்ராஜா இயக்குவதாக இருந்தது. அவருடன் மூன்று மாதம் இணைந்து பயணித்தோம். அந்த மூன்று மாத காலத்திற்குள் அவர் லண்டனில் உள்ள வெளிநாட்டு நடிகை ஒருவர் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார். அவருடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டோம். மூன்று மாதத்திற்குப் பிறகு மோகன்ராஜாவிற்கு சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, சிரஞ்சீவி உடனான படத்தை இயக்கி நிறைவு செய்த பிறகு இந்தப் படத்தில் பணியாற்றுகிறேன் என சொன்னார். நான் நன்றி என்று சொல்லிவிட்டு, உங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடருங்கள் என்றேன். அதன் பிறகு நான் இயக்கத் தீர்மானித்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து யோசிக்கத் தொடங்கினோம். அப்போது சிம்ரனைத் தவிர வேறு யாரும் என் எண்ணத்தில் வரவில்லை. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு பெரிய அளவில் பேராதரவை வழங்கினார்,” என்றார்.

'அந்தகன்' படத்தை இயக்குவதைவிட்டு மோகன்ராஜா இயக்கச் சென்ற தெலுங்குப் படம் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'காட்பாதர்' படம். ஆனால், அப்படம் தெலுங்கில் தோல்வியைத் தழுவியது. மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக் தான் 'காட்பாதர்'. அந்தப் படத்திற்குப் பின் மோகன்ராஜா இயக்கத்தில் இன்னும் எந்தப் படமும் வரவில்லை. ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க உள்ள 'தனி ஒருவன் 2' படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தற்போது செய்து வருகிறார் மோகன் ராஜா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தேசிய விருதுகள் - தமிழிலிருந்து சென்றது நான்கு படங்கள் மட்டுமே…தேசிய விருதுகள் - தமிழிலிருந்து ... ஒரே நேரத்தில் படங்கள் இயக்கி வரும் தாத்தாவும் பேரனும் ஒரே நேரத்தில் படங்கள் இயக்கி வரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)