பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பெரும்பாலும் பிரபல நடிகர்களின் வாரிசுகள் பெற்றோரை போலவே தாங்களும் நடிகராக களம் இறங்கி வரும் வேளையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மட்டும் இதிலிருந்து விலகி தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகரை போல இயக்குனராக மாறியுள்ளார். வெளிநாடு சென்று இதற்கான படிப்பை படித்துவிட்டு வந்த ஜேசன் சஞ்சய் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றை இயக்கும் முன்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இவரது தாத்தா இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவ்வப்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.
அதே சமயம் வயதானாலும் கூட தற்போதும் டைரக்ஷன் மீதான ஆர்வம் குறையாமல் 'கூரன்' என்கிற படத்தை தற்போது இயக்கி வருகிறாராம் எஸ் ஏ சந்திரசேகர். அவரது ஆரம்பகால படங்களில் அதிகம் இடம் பெற்று நடித்த நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன் எஸ்.ஏ.சி படம் இயக்கும் தகவலையும் தற்போது தெரியப்படுத்தியுள்ளார். அந்த வகையில் ஒரே நேரத்தில் திரை உலகில் தாத்தாவும் பேரனும் படம் இயக்குகிறார்கள் என்பது அதிசயமான ஒன்றுதான்.