மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபாஸ் நடித்து வரும் சலார் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் ஆந்திராவிலும், மும்பையிலும் நடைபெற்று வருகின்றன. தற்போது பிரபாஸ் ஆந்திராவில் சலார் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டு இருந்தாலும், மும்பையில் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் துவங்கப்பட்டது. பிரபாஸ் மற்றும் வில்லனாக நடிக்கும் சயீப் அலிகான் ஆகியோர் இல்லாமலேயே படபிடிப்பை துவங்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக முதல் நாளே இந்தப்படத்திற்காக போடப்பட்டிருந்த செட்தில் தீ விபத்து ஏற்பட்டது, நல்லவேளையாக படக்குழுவினர் சிறிய காயங்கள் கூட இல்லாமல் தப்பித்தனர்.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் பட்ட காலிலேயே படும் என்பது போல பிரபாஸ் தற்போது நடித்து வரும் சலார் படக்குழுவினர் சிலர் சாலை விபத்தில் சிக்கிய அடுத்த அதிர்ச்சிகரமான நிகழ்வும் நடந்துள்ளது. சலார் படப்பிடிப்பு முடித்து நேற்று மாலை தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பும்போது, படக்குழுவினர் வந்த வேன் ஒன்றின் மீது லாரி ஒன்று மோதி விபத்திற்கு ஆளானது. இதில் காயமடைந்த படக்குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகுபலி சமயத்தில் நான்கு வருடங்களுக்கு ஒரு படம் என நடித்து வந்த நடிகர் பிரபாஸ், தற்போது ஆச்சர்யமாக ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதற்கெல்லாம் திருஷ்டி பட்டுவிட்டது போல இப்படி அடுத்தடுத்த விபத்துகள் நடந்துள்ளதாக படக்குழுவினரில் சிலர் பேசிக்கொள்கின்றனர்.