300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-, விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம் மாஸ்டர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்படம் ஓடிய தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனபோதும் படம் வெளியான நாளில் இருந்தே படத்தின் வசூலை பற்றி எக்குதப்பான தகவல்கள் வருகின்றன. தற்போது வரை 200 கோடி வசூல் என சொல்லப்படுகிறது. சிலர் 300 கோடி என சமூகவலைதளங்களில் கிளப்பிவிட்டுள்ளனர்.
இப்படித்தான் முன்பு பிகில் படம் வெளியானபோதும் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய வசூல் செய்தியை வெளியிட்டு அந்நிறுவனத்தை ஐடி ரெய்டில் சிக்க வைத்தார்கள். அதேபோன்று தான் இப்போது மாஸ்டர் படத்தின் வசூலையும் தாறுமாறாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள் என ஒரு பக்கம் விமர்சனமும் வருகிறது
இப்படியான நிலையில், மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அப்பட வசூல் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், ''200 கோடி, 300 கோடி வசூல் என்று சொல்வதை என்னவென்றே புரியாமல் ரசிகர்கள் பரபரப்பாக்கி வருகிறார்கள். ஆனால் அவை எல்லாம் படத்தை விற்கப்பட்ட தொகையாகும். இந்த தொகைக்கு மேல் பணம் வந்தால் தான் அது லாபம் ஆகும் என்று கூறியுள்ள சேவியர் பிரிட்டோ, 50 சதவிகிதம் இருக்கைகளுக்கு இவ்வளவு வசூல் வந்தது எதிர்பாராத ஒன்று தான். அந்த வகையில், வைரஸ் தொற்று நேரத்தில் இந்த அளவுக்கு மாஸ்டர் வசூலிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' என்றும் தெரிவித்துள்ளார்.