சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
அமரர் கல்கி எழுதிய மிகப்பெரிய வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்', புத்தக விரும்பிகளின் மனதை கவர்ந்த நாவல். இதை படமாக்கி வரும் இயக்குனர் மணிரத்னம், இதை தனது கனவு படமாகவே இயக்குகிறார். பாலிவுட்டின் ஐஸ்வர்யா ராய் உட்பட, தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்கின்றனர்.. ஏற்கனவே சில நாட்கள் நடந்த படப்பிடிப்பு கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ரகுமான், இந்த தகவலை உறுதி செய்துள்ளார். முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனுபவத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ள ரகுமான், “பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொண்டுள்ளேன்.. முதல்நாள் முதல் காட்சியே, ஐஸ்வர்யா ராயுடன் நடித்ததில் மிகப்பெரிய சந்தோஷத்தில் இருக்கிறேன். படக்குழுவினர் உத்தரவு காரணமாக புகைப்படங்களை பகிர முடியவில்லை நண்பர்களே” என குறிப்பிட்டுளார். நடிகர் ரகுமான் மணிரத்னம் டைரக்சனில் நடிப்பதும், ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடிப்பதும் இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தகது. .