நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பிரமாண்டமான கதை என்பதை விட, பிரமாதமான கதையில் நடிக்க வேண்டும் என்பது தான் விஜய்யின் எதிர்பார்ப்பாக உள்ளது என்கிறார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். மேலும் அவர் கூறுகையில், இன்றைய இளைய தலைமுறை இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை விஜய்க்கு அதிகமாக உள்ளது. அவரிடத்தில் கதை சொல்லும்போது அதில் ஒரு சின்ன பொறி கிடைத்தாலும் போதும் அதை அப்படியே டெவலப் பண்ணுங்க என்று எனர்ஜி கொடுக்கிறார் விஜய். அப்படித்தான் மாஸ்டர் படம் உருவாவதற்கு முன்பு நடந்தது. அதேபோல்தான் இப்போது நெல்சன் சொன்ன ஒரு கரு பிடித்து விட உடனே ஓகே பண்ணி விட்டார். அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு செல்கிறார்கள் என்று கூறும் லோகேஷ் கனகராஜ், புதிய வரவு இயக்குனர்களிடம் ஏதாவது புதிய விசயங்கள் கிடைக்கும் என்கிற தேடலில் விஜய் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்கிறார்.