சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
பிரமாண்டமான கதை என்பதை விட, பிரமாதமான கதையில் நடிக்க வேண்டும் என்பது தான் விஜய்யின் எதிர்பார்ப்பாக உள்ளது என்கிறார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். மேலும் அவர் கூறுகையில், இன்றைய இளைய தலைமுறை இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை விஜய்க்கு அதிகமாக உள்ளது. அவரிடத்தில் கதை சொல்லும்போது அதில் ஒரு சின்ன பொறி கிடைத்தாலும் போதும் அதை அப்படியே டெவலப் பண்ணுங்க என்று எனர்ஜி கொடுக்கிறார் விஜய். அப்படித்தான் மாஸ்டர் படம் உருவாவதற்கு முன்பு நடந்தது. அதேபோல்தான் இப்போது நெல்சன் சொன்ன ஒரு கரு பிடித்து விட உடனே ஓகே பண்ணி விட்டார். அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு செல்கிறார்கள் என்று கூறும் லோகேஷ் கனகராஜ், புதிய வரவு இயக்குனர்களிடம் ஏதாவது புதிய விசயங்கள் கிடைக்கும் என்கிற தேடலில் விஜய் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்கிறார்.