மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு கேரளாவில் இம்மாதம் 5ம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதி அளித்தது. 50 சதவீத இருக்கைகள், இரவு நேரக் காட்சிகள் கிடையாது மற்றும் சில சலுகைகளுக்கு கோரிக்கை ஆகியவற்றை முன் வைத்து தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என மலையாளத் திரையுலகத்தினர் அறிவித்தார்கள்.
தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தால், விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தை கேரளாவில் திரையிட முடியாத சூழல் உருவாகியது. மலையாளத் திரையுலகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் சிலர் வேண்டுமென்றே 'மாஸ்டர்' படத்தை வெளியிடுவதைத் தடுக்கவே இப்படி ஒரு போராட்டத்தை அறிவித்ததாகவும் விஜய் ரசிகர்களிடம் தகவல் பரவியது.
இந்நிலையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த மலையாளத் திரையுலகினர் அவர்களது கோரிக்கைகளுக்கு முதல்வர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து தியேட்டர்களைத் திறக்க முடிவெடுத்துள்ளனர். எனவே, தியேட்டர்களைத் திறப்பது பற்றிய முடிவை கேரளா பிலிம் சேம்பர் விரைவில் அறிவிக்க உள்ளது. 'மாஸ்டர்' படம் வெளியாகும் ஜனவரி 13 முதல் தியேட்டர்கள் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது.