பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு கேரளாவில் இம்மாதம் 5ம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதி அளித்தது. 50 சதவீத இருக்கைகள், இரவு நேரக் காட்சிகள் கிடையாது மற்றும் சில சலுகைகளுக்கு கோரிக்கை ஆகியவற்றை முன் வைத்து தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என மலையாளத் திரையுலகத்தினர் அறிவித்தார்கள்.
தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தால், விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தை கேரளாவில் திரையிட முடியாத சூழல் உருவாகியது. மலையாளத் திரையுலகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் சிலர் வேண்டுமென்றே 'மாஸ்டர்' படத்தை வெளியிடுவதைத் தடுக்கவே இப்படி ஒரு போராட்டத்தை அறிவித்ததாகவும் விஜய் ரசிகர்களிடம் தகவல் பரவியது.
இந்நிலையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த மலையாளத் திரையுலகினர் அவர்களது கோரிக்கைகளுக்கு முதல்வர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து தியேட்டர்களைத் திறக்க முடிவெடுத்துள்ளனர். எனவே, தியேட்டர்களைத் திறப்பது பற்றிய முடிவை கேரளா பிலிம் சேம்பர் விரைவில் அறிவிக்க உள்ளது. 'மாஸ்டர்' படம் வெளியாகும் ஜனவரி 13 முதல் தியேட்டர்கள் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது.