இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு கேரளாவில் இம்மாதம் 5ம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதி அளித்தது. 50 சதவீத இருக்கைகள், இரவு நேரக் காட்சிகள் கிடையாது மற்றும் சில சலுகைகளுக்கு கோரிக்கை ஆகியவற்றை முன் வைத்து தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என மலையாளத் திரையுலகத்தினர் அறிவித்தார்கள்.
தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தால், விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தை கேரளாவில் திரையிட முடியாத சூழல் உருவாகியது. மலையாளத் திரையுலகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் சிலர் வேண்டுமென்றே 'மாஸ்டர்' படத்தை வெளியிடுவதைத் தடுக்கவே இப்படி ஒரு போராட்டத்தை அறிவித்ததாகவும் விஜய் ரசிகர்களிடம் தகவல் பரவியது.
இந்நிலையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த மலையாளத் திரையுலகினர் அவர்களது கோரிக்கைகளுக்கு முதல்வர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து தியேட்டர்களைத் திறக்க முடிவெடுத்துள்ளனர். எனவே, தியேட்டர்களைத் திறப்பது பற்றிய முடிவை கேரளா பிலிம் சேம்பர் விரைவில் அறிவிக்க உள்ளது. 'மாஸ்டர்' படம் வெளியாகும் ஜனவரி 13 முதல் தியேட்டர்கள் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது.