திகில் படத்தில் நடிக்க வேண்டும்: 'மதராஸி' அக்ஷய் கிருஷ்ணா ஆசை | அஜித் அளித்த வாழ்க்கை பாடம் சிபி சந்திரன் சிலிர்ப்பு | 3 நாட்களில் 200 கோடி வசூலித்த 'ஓஜி' | விஜய் சேதுபதி படத் தலைப்பு அறிவிப்பு தள்ளிவைப்பு | நிவின்பாலியின் 'சர்வம் மாயா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தவப்புதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆதிபுருஷ் - ஞாயிறு திரைப்படங்கள் | பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் |
சமீபத்தில் 71வது தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவில் மோகன்லால் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசும்போது, மோகன்லால் நடித்த வானப்பிரஸ்தம் மற்றும் கர்ணாபரம் ஆகிய இரண்டு படங்களில் அவரது நடிப்பு குறித்து பாராட்டி பேசினார். கேரளா வந்த மோகன்லாலிடம் செய்தியாளர்கள் இந்த இரண்டு படங்களை ஜனாதிபதி குறிப்பிட்டு பேசியது எதனால் என கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த மோகன்லால், “இந்த இரண்டு படங்களுமே கிளாசிக்கல் கலையை அடிப்படையாகக் கொண்டவை. அதில் ஒன்று சமஸ்கிருத ட்ராமா. இன்னொன்று முப்பரிமாண கலை வடிவத்தைக் கொண்டது. பெரும்பாலானோர் இதை திரைப்படங்களில் பயன்படுத்துவதில்லை. அதான்ல இந்த இரண்டு படங்களையும் அவர் குறிப்பிட்டு பேசியிருக்கலாம்” என்றார்.