பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

சினிமா பிரபலங்களில் நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ந்து சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு திரையுலகில் இருந்தும் ரசிகர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தற்போது அவர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் 3 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்ள வருகை தந்த மோகன்லாலுக்கு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். திரிஷ்யம் 3 படத்தின் கதாநாயகியான மீனா மோகன்லாலுக்கு சால்வை அணிவித்து தனது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.