தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
சுஜித் இயக்கத்தில், பவன் கல்யாண், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்த 'ஓஜி' தெலுங்குப் படம் நேற்று முன்தினம் வெளியானது. படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார். பிரபாஸ் நடித்த 'சலார்' படத்திற்குப் பிறகு ஸ்ரேயாவுக்கு இந்தப் படம் தெலுங்கில் முக்கியமான ஒரு படமாக அமைந்துள்ளது.
படத்தின் வரவேற்பு குறித்து மகிழ்ச்சியுடன் இருக்கும் ஸ்ரேயா, “சுஜித் எழுதிய கீதா கதாபாத்திரத்தின் எழுத்து, திரையில் வலிமை என்பது திரைக்கு வெளியே உள்ள தைரியத்தால் உருவாக்கப்படுகிறது என எனக்கு நினைவூட்டியது.
'ஓஜி' போன்ற ஒரு படத்தில் ஒரு பெண்ணை சமரசமின்றி, முழுமையாகவும் நிற்க அனுமதிப்பதற்கு அரிதான நம்பிக்கையுடன் கூடிய இயக்குநர் தேவைப்படுகிறது. இவ்வளவு பிரம்மாண்டமான உலகத்திற்குள் அவளை தன் நிலையைத் தக்க வைக்க அனுமதிப்பதும், கீதாவை எனக்கு அளித்ததற்கு நன்றி சுஜித்.
கீதாவை உருவாக்கிய விதம், என்னுடன் எப்போதும் தங்கியிருக்கும் ஒரு அனுபவமாக இருந்தது. நீங்கள் ஒரு சிறந்த மனிதராக இருக்கும்போது சிறந்த விஷயங்கள் நடக்கும் என நான் எப்போதும் நம்புகிறேன். நீங்கள் சுற்றியிருக்கும் இனிமையான, மிகவும் உண்மையான நபர், எனவே இந்த வெற்றி உண்மையிலேயே தகுதியானது. உங்களின் கடின உழைப்பு, நம்பிக்கை மற்றும் பல தியாகங்களே அதற்கு சாட்சி,” என இயக்குனரைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.