ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது |
ஒரு படம் ரிலீஸ் ஆன சில நாட்களில் சக்சஸ் மீட் அல்லது நன்றி அறிவிப்பு விழா நடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெலுங்கு சினிமாவில் ஒருபடி மேலேபோய் படம் ரிலீஸ் ஆன அன்றே நடத்திவிடுகிறார்கள், ஹரி ஹர வீரமல்லு, கிங்டம் படத்துக்கு அப்படி நடந்தது. இப்போது உண்மையிலே வெற்றி பெற்று இருக்கிறது பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி. 75 கோடிவரை வசூலித்துள்ளது. பின்னே ஏன் சக்சஸ் மீட் நடத்தவில்லை. விஜய்சேதுபதி மீது பாலியல் புகார் வந்ததால், அது குறித்து யாராவது கேள்வி எழுப்புவார்கள், மீடியாவில் சர்ச்சை ஆக, இந்த சந்தோஷமான நேரத்தில் இமேஜ் டேமேஜ் ஆகும் என விஜய்சேதுபதி தயங்குகிறாரா என விசாரித்தால், அதுவும் ஒருவகை காரணம்.
ஆனாலும் 100 கோடி வந்தபின் சக்சஸ் மீட் வைக்கலாம் என படக்குழு நினைக்கிறது. ஒருவேளை விஜய்சேதுபதி நேரம் ஒதுக்கினால் இந்த வாரம் அந்த நிகழ்ச்சியை நடத்தலாம். மகாராஜா படத்துக்கு இப்படியொரு சக்சஸ்மீட்டை நடத்தினார் விஜயசேதுபதி. ஆனால், தலைவன் தலைவியில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்து இருப்பதால் அவர்களை ஒருங்கிணைக்க வேண்டியது இருக்கிறது. விஜய் சேதுபதியும் புரிஜெகன்நாத் இயக்கும் படத்தில் பிஸி. ஆகவே சக்சஸ் மீட் பணிகள் தள்ளிப்போகிறது. எப்படியும் நடத்தியே ஆக வேண்டும் என்று படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் உறுதியாக இருக்கிறதாம்.