மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

ஒரு படம் ரிலீஸ் ஆன சில நாட்களில் சக்சஸ் மீட் அல்லது நன்றி அறிவிப்பு விழா நடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெலுங்கு சினிமாவில் ஒருபடி மேலேபோய் படம் ரிலீஸ் ஆன அன்றே நடத்திவிடுகிறார்கள், ஹரி ஹர வீரமல்லு, கிங்டம் படத்துக்கு அப்படி நடந்தது. இப்போது உண்மையிலே வெற்றி பெற்று இருக்கிறது பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி. 75 கோடிவரை வசூலித்துள்ளது. பின்னே ஏன் சக்சஸ் மீட் நடத்தவில்லை. விஜய்சேதுபதி மீது பாலியல் புகார் வந்ததால், அது குறித்து யாராவது கேள்வி எழுப்புவார்கள், மீடியாவில் சர்ச்சை ஆக, இந்த சந்தோஷமான நேரத்தில் இமேஜ் டேமேஜ் ஆகும் என விஜய்சேதுபதி தயங்குகிறாரா என விசாரித்தால், அதுவும் ஒருவகை காரணம்.
ஆனாலும் 100 கோடி வந்தபின் சக்சஸ் மீட் வைக்கலாம் என படக்குழு நினைக்கிறது. ஒருவேளை விஜய்சேதுபதி நேரம் ஒதுக்கினால் இந்த வாரம் அந்த நிகழ்ச்சியை நடத்தலாம். மகாராஜா படத்துக்கு இப்படியொரு சக்சஸ்மீட்டை நடத்தினார் விஜயசேதுபதி. ஆனால், தலைவன் தலைவியில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்து இருப்பதால் அவர்களை ஒருங்கிணைக்க வேண்டியது இருக்கிறது. விஜய் சேதுபதியும் புரிஜெகன்நாத் இயக்கும் படத்தில் பிஸி. ஆகவே சக்சஸ் மீட் பணிகள் தள்ளிப்போகிறது. எப்படியும் நடத்தியே ஆக வேண்டும் என்று படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் உறுதியாக இருக்கிறதாம்.




