ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 2015ல் வெளிவந்த 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்திற்குப் பிறகு நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 10 வருடங்களில் அவர் நடித்த 9 படங்கள் மட்டுமே வெளிவந்தன. அவற்றில் தமிழ், தெலுங்கில் தயாரான 'தோழா, பாகமதி' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வரவேற்பைப் பெற்றன.
அவர் நடித்து கடைசியாக 2023 செப்டம்பரில் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்' படம் வெளிவந்து வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அவர் 'காட்டி' தெலுங்குப் படத்தில் நடித்து வந்தார். கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி இப்படம் பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடித்துள்ள ஒரு படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அடுத்து மலையாளத்தில் அவர் நடித்துள்ள 'கதனார்' படம் வர உள்ளது.