ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
சிவகார்த்திகேயன் அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த மதராஸி படம், செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. ரஜினிகாந்த்தின் கூலி வெளியானபின் மதராஸி பட புரமோஷன்களை ஆரம்பிக்க உள்ளனர். முருகதாஸ், சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் இது முக்கியமான படம். காரணம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் பெரிய வெற்றி பெற்றது. ரூ.350 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. ஆகவே, இன்னொரு வெற்றிக்கொடுத்து அவர் தன்னை நிரூபிக்க ஆசைப்படுகிறார். முருகதாஸிற்கு பெரிய வெற்றி தேவைப்படுகிறது. ஹிந்தியில் சல்மான்கானை வைத்து அவர் இயக்கிய சிக்கந்தர் படம் தோல்வி. மொத்தமே 160 கோடி வரை மட்டுமே வசூலித்ததாக தகவல். ஆகவே, அவரின் அடுத்த படம் அவர் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளது. இரண்டுபேருமே மதராஸியை பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். கஜினி, துப்பாக்கி கலந்த கலவை என மதராஸி பற்றி முருகதாஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.