இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
இன்றைய காலகட்டத்தில் திரையுலக பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள் தங்களது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க இன்ஸ்டாகிராம், எக்ஸ் கணக்குகளை தவறாது பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். ஆனால் சில விஷமிகள் அவ்வப்போது இது போன்ற பிரபலங்களின் சோசியல் மீடியா கணக்குகளை ஹேக் செய்து அவர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதுடன் அவர்களை தவறாக நினைக்கும் விதமாக பல செய்திகளையும் தங்கள் இஷ்டம் போல வெளியிடுகின்றனர். அவ்வப்போது இது நடைபெறுவது உண்டு. இந்த நிலையில் தற்போது தனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை அலர்ட் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ருதிஹாசன், “என்னுடைய எக்ஸ் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அதில் இருப்பவை நான் பதிவிட்டது அல்ல. அதனால் நான் அந்தப் பக்கத்திற்கு மீண்டும் திரும்பி வரும் வரை யாரும் அந்த பக்கத்தில் பதில் கருத்து போட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமும் ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அது ஹேக் செய்யப்படவில்லை என்றாலும் கூட, அந்த சமயத்தில் தனது மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் வேலை செய்யவில்லை என்று சில நாட்கள் வரை அதை பயன்படுத்த முடியாமல் சிரமங்களை சந்தித்தார் ஸ்ருதிஹாசன்.