ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
'பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா, வீர தீர சூரன்' என பல படங்களை இயக்கியவர் அருண்குமார். இவர் கமல்ஹாசனை சந்தித்து ஒரு கதை சொல்லி ஓகே செய்துள்ளார். அந்த கதை கமலுக்கு பிடித்து விட்டதை அடுத்து அப்படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.
அதோடு ஏற்கனவே ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கும் தனது 237வது படத்தில் தக்லைப் படத்திற்கு பிறகு நடிக்க திட்டமிட்டிருந்தார் கமல்ஹாசன். ஆனால் அந்த கதையில் அவருக்கு போதுமான திருப்தி ஏற்படாததால் தற்போது மொத்த ஸ்கிரிப்ட்டையும் மாற்றுமாறு கூறியிருக்கிறார். அதனால் அப்படத்திற்கான புதிய ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதனால் தனது 237வது படத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அதற்குள் அருண்குமார் இயக்கும் படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.