மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

'பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா, வீர தீர சூரன்' என பல படங்களை இயக்கியவர் அருண்குமார். இவர் கமல்ஹாசனை சந்தித்து ஒரு கதை சொல்லி ஓகே செய்துள்ளார். அந்த கதை கமலுக்கு பிடித்து விட்டதை அடுத்து அப்படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.
அதோடு ஏற்கனவே ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கும் தனது 237வது படத்தில் தக்லைப் படத்திற்கு பிறகு நடிக்க திட்டமிட்டிருந்தார் கமல்ஹாசன். ஆனால் அந்த கதையில் அவருக்கு போதுமான திருப்தி ஏற்படாததால் தற்போது மொத்த ஸ்கிரிப்ட்டையும் மாற்றுமாறு கூறியிருக்கிறார். அதனால் அப்படத்திற்கான புதிய ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதனால் தனது 237வது படத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அதற்குள் அருண்குமார் இயக்கும் படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.