இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி, வரும் ஜூலை 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‛ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடக்க உள்ளது. அதில் முத்துக்குமாருடன் பணியாற்றிய யுவன்ஷங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், தமன், விஜய்ஆண்டனி, கார்த்திக்ராஜா, நிவாஸ் கே பிரசன்னா உள்ளிட்ட பல இசைமைப்பாளர்கள் இசை விருந்து கொடுக்கிறார்கள்.
தமிழ் சினிமா சரித்திரத்தில் இப்படி பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைவது இதுவே முதன்முறை. சித்தார்த், ஆண்ட்ரியா, திப்பு, உத்தாரா, சைந்தவி, ஹரிணி உள்ளிட்ட பலர் பாடுகிறார்கள். கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவிசோகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் முத்துக்குமார் பற்றி பேசுகிறார்கள்.
''மறைந்த முத்துக்குமாருடன் பணியாற்றிய பல இயக்குனர்களும் தங்கள் அனுபவங்களை சொல்ல இருக்கிறார்கள். இந்த விழாவுக்கு 8 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்துக்குமார் மறைந்த சில மாதங்களில் இப்படியொரு விழா எடுக்க நினைத்தோம். சில காரணங்களால் அது நடக்கவில்லை. இப்போது அதை செய்கிறோம்'' என்கிறார் இயக்குனர் ஏ.எல். விஜய்.