டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' |
கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி, வரும் ஜூலை 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‛ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடக்க உள்ளது. அதில் முத்துக்குமாருடன் பணியாற்றிய யுவன்ஷங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், தமன், விஜய்ஆண்டனி, கார்த்திக்ராஜா, நிவாஸ் கே பிரசன்னா உள்ளிட்ட பல இசைமைப்பாளர்கள் இசை விருந்து கொடுக்கிறார்கள்.
தமிழ் சினிமா சரித்திரத்தில் இப்படி பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைவது இதுவே முதன்முறை. சித்தார்த், ஆண்ட்ரியா, திப்பு, உத்தாரா, சைந்தவி, ஹரிணி உள்ளிட்ட பலர் பாடுகிறார்கள். கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவிசோகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் முத்துக்குமார் பற்றி பேசுகிறார்கள்.
''மறைந்த முத்துக்குமாருடன் பணியாற்றிய பல இயக்குனர்களும் தங்கள் அனுபவங்களை சொல்ல இருக்கிறார்கள். இந்த விழாவுக்கு 8 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்துக்குமார் மறைந்த சில மாதங்களில் இப்படியொரு விழா எடுக்க நினைத்தோம். சில காரணங்களால் அது நடக்கவில்லை. இப்போது அதை செய்கிறோம்'' என்கிறார் இயக்குனர் ஏ.எல். விஜய்.