லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
‛தக்லைப்' பட தோல்வியால் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்தார் மணிரத்னம் என்று ஒரு தரப்பு கதை விடுகிறது. இது உண்மையா என்று விசாரித்தால், ''கூலி, ஜெயிலர் 2 படங்களில் ரஜினி பிஸியாக இருக்கிறார். அடுத்த படம் குறித்து முடிவெடுக்கவில்லை. ரஜினியும், மணிரத்னமும் பல ஆண்டுகளாக நண்பர்கள். சிலமுறை இணைய நினைத்தார்கள் நடக்கவில்லை. பொன்னியின் செல்வன் படத்தில் கூட ஒரு கேரக்டரில் ரஜினி நடிப்பதாக இருந்தது. அதுவும் கை கூடவில்லை.
இந்நிலையில், கமல், ரஜினி இணையும் படத்தை மணிரத்னம் இயக்குவதாக பேசப்பட்டது. அந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கும் என்று பேச்சு எழுந்தது. ஆனால், பின்னர் அது பற்றி யாரும் பேசவில்லை. இந்த சூழ்நிலையில் தக்லைப் வந்தது. இந்த படத்தின் தோல்வியால் மணிரத்னம் மார்க்கெட்டுக்கு எந்த சிக்கலும் இல்லை. அவர் ரஜினியை வைத்து இயக்க நினைத்தால், சரியான கதை அமைந்தால் அது நடக்கும். ரஜினியும் மணிரத்னத்தை பெரிதாக மதிக்கிறார். தளபதிக்குபின் இணையும் படம் பெரிதாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். மற்றபடி, தக்லைப் பற்றி வதந்திகள் வருகின்றன. அதில் இதுவும் ஒன்று. மணிரத்னம் கால்ஷீட் கேட்டால் ரஜினி மறுக்கமாட்டார்'' என்கிறார்கள்.