வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

‛தக்லைப்' பட தோல்வியால் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்தார் மணிரத்னம் என்று ஒரு தரப்பு கதை விடுகிறது. இது உண்மையா என்று விசாரித்தால், ''கூலி, ஜெயிலர் 2 படங்களில் ரஜினி பிஸியாக இருக்கிறார். அடுத்த படம் குறித்து முடிவெடுக்கவில்லை. ரஜினியும், மணிரத்னமும் பல ஆண்டுகளாக நண்பர்கள். சிலமுறை இணைய நினைத்தார்கள் நடக்கவில்லை. பொன்னியின் செல்வன் படத்தில் கூட ஒரு கேரக்டரில் ரஜினி நடிப்பதாக இருந்தது. அதுவும் கை கூடவில்லை.
இந்நிலையில், கமல், ரஜினி இணையும் படத்தை மணிரத்னம் இயக்குவதாக பேசப்பட்டது. அந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கும் என்று பேச்சு எழுந்தது. ஆனால், பின்னர் அது பற்றி யாரும் பேசவில்லை. இந்த சூழ்நிலையில் தக்லைப் வந்தது. இந்த படத்தின் தோல்வியால் மணிரத்னம் மார்க்கெட்டுக்கு எந்த சிக்கலும் இல்லை. அவர் ரஜினியை வைத்து இயக்க நினைத்தால், சரியான கதை அமைந்தால் அது நடக்கும். ரஜினியும் மணிரத்னத்தை பெரிதாக மதிக்கிறார். தளபதிக்குபின் இணையும் படம் பெரிதாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். மற்றபடி, தக்லைப் பற்றி வதந்திகள் வருகின்றன. அதில் இதுவும் ஒன்று. மணிரத்னம் கால்ஷீட் கேட்டால் ரஜினி மறுக்கமாட்டார்'' என்கிறார்கள்.




