'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கேரள மக்களில் பெரும்பாலோர் முருக பக்தர்கள். குறிப்பாக பழனி முருக பக்தர்கள். கேரளாவின் அருகில் உள்ள செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி என்ற ஊரில் அமைந்துள்ளது. உயர்ந்த மலைகளை பின்னணியாக கொண்டு குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோவில் அந்த பகுதியில் மிகவும் பிரபலம்.
இந்த கோவிலுக்கு நேற்று மோகன்லால் திடீரென வருகை தந்தார். நேராக கோவிலுக்கு சென்ற அவர் முருகனை வழிபட்டு தங்கவேலை காணிக்கையாக செலுத்தினார். எம்புரான், தொடரும் படங்களின் வெற்றி, மிகப்பெரிய வசூல் இவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்க வேல் காணிக்கையாக வழங்கி உள்ளார்.
'தொடரும்' படத்தின் பாடல் ஒன்றில் 'திருமலை முருகனுக்கு அரோகரா' என்ற வரி இடம் பெற்றிருந்தது. அந்த வரியை கேட்டதுமே திருமலை முருகனுக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்று மோகன்லால் பட வெளியீட்டுக்கு முன்பே முடிவு செய்திருந்தாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.