காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கன்னடத்தில் உருவாகி, கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ள படம் ‛கேடி - தி டெவில்'. துருவ் சர்ஜா நாயகனாகவும், ரீமா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் பிரபலங்களான சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேம் என்பவர் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.
கேரளாவில் நடைபெற்ற இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஷில்பா ஷெட்டி, ‛‛மலையாள சினிமாவின் மிகப்பெரிய ரசிகை நான். ஹிந்தியை தவிர, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்துள்ளேன். மலையாளத்திலும் சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் பயம் காரணமாக நடிக்க சம்மதிக்கவில்லை. ஏனெனில், மலையாளத்தில் என் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய முடியுமா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் மலையாளத்தில் நடிப்பேன். இந்திய சினிமாவின் மிகவும் அற்புதமான நடிகர்களில் ஒருவர் மோகன்லால். அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். பாசில் இயக்கிய 'நோக்கேத்ததூரது கண்ணும் நட்டு' என்ற மலையாளப் படம் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று'' எனப் பேசியுள்ளார்.