அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
கன்னடத்தில் உருவாகி, கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ள படம் ‛கேடி - தி டெவில்'. துருவ் சர்ஜா நாயகனாகவும், ரீமா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் பிரபலங்களான சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேம் என்பவர் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.
கேரளாவில் நடைபெற்ற இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஷில்பா ஷெட்டி, ‛‛மலையாள சினிமாவின் மிகப்பெரிய ரசிகை நான். ஹிந்தியை தவிர, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்துள்ளேன். மலையாளத்திலும் சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் பயம் காரணமாக நடிக்க சம்மதிக்கவில்லை. ஏனெனில், மலையாளத்தில் என் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய முடியுமா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் மலையாளத்தில் நடிப்பேன். இந்திய சினிமாவின் மிகவும் அற்புதமான நடிகர்களில் ஒருவர் மோகன்லால். அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். பாசில் இயக்கிய 'நோக்கேத்ததூரது கண்ணும் நட்டு' என்ற மலையாளப் படம் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று'' எனப் பேசியுள்ளார்.