காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் பாகுபலி. கடந்த 2015ம் ஆண்டில் முதல் பாகம் வெளியான நிலையில் 2017ல் இரண்டாம் பாகமும் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் பாகுபலி திரைக்கு வந்து பத்தாம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து ‛பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் அக்டோபர் 31ம் தேதி ரீரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்தார்கள்.
இந்நிலையில் இந்த படத்தை வரவேற்று சோசியல் மீடியாவில் பலரும் கருத்து வெளியிட்டார்கள். குறிப்பாக, புக் மை ஷோ- வில் இந்த படத்தை பார்ப்பதற்கு ஒரே வாரத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதோடு, இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து 5 மணி நேரம் 27 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில், வெளியிட இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியானது. ஆனால், அந்த செய்தியை அப்படக் குழு மறுத்துள்ளது.
இந்த படத்தின் நீளம் ஒரு ஐபிஎல் போட்டி நேரத்திற்கு சமமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். கூடிய சீக்கிரமே பாகுபலி தி எபிக் படத்தின் அதிகாரப்பூர்வ ரன்னிங் டைம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.