சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் பாகுபலி. கடந்த 2015ம் ஆண்டில் முதல் பாகம் வெளியான நிலையில் 2017ல் இரண்டாம் பாகமும் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் பாகுபலி திரைக்கு வந்து பத்தாம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து ‛பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் அக்டோபர் 31ம் தேதி ரீரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்தார்கள்.
இந்நிலையில் இந்த படத்தை வரவேற்று சோசியல் மீடியாவில் பலரும் கருத்து வெளியிட்டார்கள். குறிப்பாக, புக் மை ஷோ- வில் இந்த படத்தை பார்ப்பதற்கு ஒரே வாரத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதோடு, இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து 5 மணி நேரம் 27 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில், வெளியிட இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியானது. ஆனால், அந்த செய்தியை அப்படக் குழு மறுத்துள்ளது.
இந்த படத்தின் நீளம் ஒரு ஐபிஎல் போட்டி நேரத்திற்கு சமமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். கூடிய சீக்கிரமே பாகுபலி தி எபிக் படத்தின் அதிகாரப்பூர்வ ரன்னிங் டைம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.




