என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் முதல் முறையாக நடிகர் வடிவேலு முழு நீள குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் வடிவேலு மற்றும் பஹத் பாசில் இருவரின் கூட்டணி மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. இந்த காம்போவுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டமே உருவானது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இயக்குனர் சுதீஷ் சங்கர் இவர்களை வைத்து மாரீசன் என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டார், வரும் ஜூலை 24ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதில் பஹத் பாசில் திருடனாகவும் வடிவேலுவிடம் இருந்து பணத்தை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேசமயம் வடிவேலு இந்த படத்தில் அல்சீமர் என்கிற ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாதாரண ஞாபக மறதியாக இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக தனது அன்றாட செயல்பாடுகளையே மறக்க கூடிய ஒரு நோய் தான் இந்த அல்சீமர்.
இப்படி ஒரு கதாபாத்திரத்தில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான தன்மாத்ரா என்கிற படத்தில் நடிகர் மோகன்லால் அற்புதமாக நடித்திருந்தார். அதன்பிறகு இந்த நோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்களை வைத்து பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை. இந்த அல்சீமரால் பாதிக்கப்பட கதாபாத்திரத்திலும் மாமன்னன் போலவே ரசிகர்களின் கவனத்தை வடிவேலு ஈர்ப்பார் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.