என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸி தம்பதியின் மகள் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். கடந்த சில வருடங்களாகவே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி பிஸியான கதாநாயகியாக நடித்து வருகிறார். மலையாளத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஓடும் குதிரை சாடும் குதிரை திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. தற்போது மலையாளத்தில் முதல் பெண் சூப்பர் மேன் கதை அம்சம் கொண்ட படமாக யோகா ; சாப்டர் ஒன்னு சந்திரா என்கிற படம் தயாராகி வருகிறது. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக மார்ஷல் என்கிற படத்திலும் நடிக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
சமீபத்தில் இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், இரண்டு குழந்தைகளுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “எப்போதுமே எனது நண்பனாக இருக்கும் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டு இருந்தார், பலரும் இந்த புகைப்படத்திற்கும் ஜாக்கி ஷெராவுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பி வந்த நிலையில், தற்போது அது குறித்த சஸ்பென்சை உடைத்துள்ளார் கல்யாணி.
இது குறித்து அவர் மீண்டும் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று நான் வெளியிட்ட புகைப்படத்தில் ஜாக்கி ஷெராப்புடன் இருக்கும் சிறுவன் தான் என்னுடைய நண்பன் பிரணவ் மோகன்லால். அந்த படத்தில் இருக்கும் அந்த மொட்டை வேறு யாரும் அல்ல,, அது நான் தான்” என்று கூறியுள்ளார்.