என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கன்னடத்தில் துருவ் சார்ஜா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள கேடி - தி டெவில் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தபோது அதில் பேசிய சஞ்சய் தத், “லியோ படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எனக்கு ஒரு பெரிய கதாபாத்திரம் தரவில்லை என்கிற கோபம் அவர் மீது உண்டு. அவர் என்னை வீணாக்கி விட்டார்” என்று பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, “மீடியாவில் இப்படி செய்தி பரவியதும் உடனடியாக சஞ்சய் தத் என்னை தொடர்பு கொண்டார். நான் ஜாலியான முறையில் ஒரு விஷயத்தை சொன்னேன். ஆனால் அதை வெட்டி ரொம்பவே மோசமான ஒரு விஷயமாக மாற்றி விட்டார்கள். நான் அந்த மாதிரி அர்த்தத்தில் சொல்லவில்லை லோகேஷ் என்று என்னிடம் கூறினார்.
நான் ஒன்றும் இந்த உலகத்தில் மிகப்பெரிய அறிவாளியோ அல்லது மிகச்சிறந்த இயக்குனரோ இல்லை. நானும் சில தவறுகள் என்னுடைய படங்களில் செய்து இருக்கிறேன். அதில் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். சஞ்சய் தத் சாரை வைத்து ஒரு மிகச்சிறந்த படம் ஒன்றை நிச்சயம் செய்வேன்” என்று கூறியுள்ளார்.