பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
மலையாளத்தில் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான தொடரும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். தற்போது வசூலில் 100 கோடியை இந்த படம் தாண்டியுள்ளது. இதற்கு முன்பாக ஆபரேஷன் ஜாவா, சவுதி வெள்ளக்கா என இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ள இவர், மோகன்லால் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை சாதித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சூட்டோடு சூடாக அவர் பஹத் பாசில் நடிக்க இருக்கும் டார்ப்பிட்டோ என்கிற படத்தையும் இயக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். இந்த நிலையில் ஆச்சரியமாக இந்த படத்தின் திரைக்கதையை பிரபல மலையாள வில்லன் நடிகர் ஆன பினு பப்பு என்பவர் எழுதுகிறார். இவர் மறைந்த சீனியர் நடிகரான குதிரவட்டம் பப்பு என்பவரின் மகன் தான். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் இவர் இதே தொடரும் படத்தில் கொடூரமான சப் இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடித்த மிரட்டி இருந்தார். அவருக்கும் தொடரும் படத்தின் மூலம் மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.
ஏற்கனவே கிட்டத்தட்ட பத்து படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள பினு பப்பு, இயக்குனர் தருண் மூர்த்தியின் முந்தைய படமான சவுதி வெள்ளக்காவிலும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது தொடரும் படத்தில் அவர் நடித்ததை தொடர்ந்து, அவர் திறமை மீது உள்ள நம்பிக்கையில் தான் பஹத் பாசில் படத்திற்காக திரைக்கதை எழுதும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்துள்ளார் இயக்குனர் தருண் மூர்த்தி.