'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | திகில் படத்தில் நடிக்க வேண்டும்: 'மதராஸி' அக்ஷய் கிருஷ்ணா ஆசை | அஜித் அளித்த வாழ்க்கை பாடம்: சிபி சந்திரன் சிலிர்ப்பு | 3 நாட்களில் 200 கோடி வசூலித்த 'ஓஜி' | விஜய் சேதுபதி படத் தலைப்பு அறிவிப்பு தள்ளிவைப்பு | நிவின்பாலியின் 'சர்வம் மாயா' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரையுலகில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இரண்டுக்கும் அடுத்தடுத்த நாட்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆச்சரியமாக இந்த இரண்டு சங்கத்திற்கும் தலைமை பொறுப்புக்கு முதன்முறையாக ஒவ்வொன்றுக்குமே ஒரு பெண் வேட்பாளர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள். அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாகவே தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த பெண் தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ் இந்த முறை தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவர் இரண்டு படங்கள்தான் தயாரித்திருக்கிறார் என்றும் மொத்தம் மூன்று படங்கள் தயாரித்திருக்க வேண்டும் என்றும் காரணம் காட்டி அவரது வேட்பு மனுவை தயாரிப்பாளர் சங்க தேர்தல் குழு நிர்வாகிகள் நிராகரித்தனர். அதே சமயம் சான்ட்ரா தாமஸ், விஜய் பாபு என்கிற நடிகருடன் இணைந்து ப்ரைடே பிலிம் ஹவுஸ் என்கிற நிறுவனம் மூலமாக ஏழு படங்களை தயாரித்திருக்கிறார். அதை அவர்கள் வேண்டுமென்றே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தன்னை நிராகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் இதை செய்துள்ளதாக குற்றம் சாட்டிய சான்ட்ரா தாமஸ் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் தான் நடிகர் மம்மூட்டி தன்னை தொலைபேசியில் அழைத்து, தற்போது தயாரிப்பாளர் சங்கம் குறித்து தான் நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார் என ஒரு அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார் சான்ட்ரா தாமஸ்.
மேலும் இது குறித்து அவர் பேசும்போது, “மம்முட்டி என்னிடம் போனில் தொடர்புகொண்டு கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பேசினார். நான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக தொடுத்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்பதாகத்தான் அவரது பேச்சு இருந்தது. நான் அவரிடம் இதே இடத்தில் உங்கள் மகள் இருந்திருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை. ஓகே உன் விருப்பம். இனி நான் எதுவும் சொல்வதற்கு இல்லை என்று சொல்லிவிட்டார். ஒவ்வொருவரும் என்னை இங்கிருந்து வெளியேற்ற நினைத்தால் நான் நிச்சயமாக இங்கே இருப்பதற்கு இன்னும் அதிகமாக போராடுவேன்” என்று அழுத்தமாக கூறியுள்ளார் சான்ட்ரா தாமஸ்.