'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! | என் அம்மா அளவுக்கு என்னால் சினிமாவில் சாதிக்க முடியாது : ஜான்வி கபூர் | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு தொடங்கியது! | தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து | பிளாஷ்பேக்: சாதனைத் திரைத் தாரகைகள் சரிதா, ஷோபாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் | பாடல்களில் ஆடியே பிரபலமானேன் என்கிறார் தமன்னா | விரைவில் மறுமணம் செய்யப் போகிறாரா சமந்தா | இவர்கள் தான் எனது ரோல் மாடல் என்கிறார் சாந்தனு | நாளை ஓடிடியில் வெளியாகும் அனுஷ்காவின் காட்டி | கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” |
பத்மினி முன்னணி நடிகை ஆவதற்கு முன் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வந்தார். 'திருவிதாங்கூர் சகோதரிகள்' என்ற பெயரில் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோர் ஆடி வந்தனர். சில காலத்திற்கு பிறகு ராகினி மலையாளத்தில் பிசியான நடிகை ஆகிவிட்டதால், பத்மினியும், லலிதாவும் ஆடி வந்தனர்.
இவர்கள் இருவரும் 'தர்ம தேவதா' என்ற படத்தில் 5 பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். காரணம் இந்த படத்தில் அவர்கள் தெருவில் நடனமாடி பிழைக்கும் நடன கலைஞர்களாக படத்தில் நடிக்கவும் செய்தனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரானது. தமிழில் தோல்வி அடைந்தது, தெலுங்கில் வெற்றி பெற்றது. சாந்தகுமார் நாயகியாக நடித்தார், அவரது கணவர் புல்லையா படத்தை தயாரித்து, இயக்கினார்.
சச்சு, கிரிஜா, சி.வி.வி. பந்துலு, கே.துரைசாமி, லிங்கமூர்த்தி, முக்கம்மாளா, பி.என்.ஆர், கவுசிக், ரேலங்கி, லட்சுமிபிரபா, கே.எஸ். அங்கமுத்து, கணபதி பட் மற்றும் 'மாஸ்டர்' மோகன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.