ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

பத்மினி முன்னணி நடிகை ஆவதற்கு முன் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வந்தார். 'திருவிதாங்கூர் சகோதரிகள்' என்ற பெயரில் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோர் ஆடி வந்தனர். சில காலத்திற்கு பிறகு ராகினி மலையாளத்தில் பிசியான நடிகை ஆகிவிட்டதால், பத்மினியும், லலிதாவும் ஆடி வந்தனர்.
இவர்கள் இருவரும் 'தர்ம தேவதா' என்ற படத்தில் 5 பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். காரணம் இந்த படத்தில் அவர்கள் தெருவில் நடனமாடி பிழைக்கும் நடன கலைஞர்களாக படத்தில் நடிக்கவும் செய்தனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரானது. தமிழில் தோல்வி அடைந்தது, தெலுங்கில் வெற்றி பெற்றது. சாந்தகுமார் நாயகியாக நடித்தார், அவரது கணவர் புல்லையா படத்தை தயாரித்து, இயக்கினார்.
சச்சு, கிரிஜா, சி.வி.வி. பந்துலு, கே.துரைசாமி, லிங்கமூர்த்தி, முக்கம்மாளா, பி.என்.ஆர், கவுசிக், ரேலங்கி, லட்சுமிபிரபா, கே.எஸ். அங்கமுத்து, கணபதி பட் மற்றும் 'மாஸ்டர்' மோகன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.