2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

பத்மினி முன்னணி நடிகை ஆவதற்கு முன் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வந்தார். 'திருவிதாங்கூர் சகோதரிகள்' என்ற பெயரில் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோர் ஆடி வந்தனர். சில காலத்திற்கு பிறகு ராகினி மலையாளத்தில் பிசியான நடிகை ஆகிவிட்டதால், பத்மினியும், லலிதாவும் ஆடி வந்தனர்.
இவர்கள் இருவரும் 'தர்ம தேவதா' என்ற படத்தில் 5 பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். காரணம் இந்த படத்தில் அவர்கள் தெருவில் நடனமாடி பிழைக்கும் நடன கலைஞர்களாக படத்தில் நடிக்கவும் செய்தனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரானது. தமிழில் தோல்வி அடைந்தது, தெலுங்கில் வெற்றி பெற்றது. சாந்தகுமார் நாயகியாக நடித்தார், அவரது கணவர் புல்லையா படத்தை தயாரித்து, இயக்கினார்.
சச்சு, கிரிஜா, சி.வி.வி. பந்துலு, கே.துரைசாமி, லிங்கமூர்த்தி, முக்கம்மாளா, பி.என்.ஆர், கவுசிக், ரேலங்கி, லட்சுமிபிரபா, கே.எஸ். அங்கமுத்து, கணபதி பட் மற்றும் 'மாஸ்டர்' மோகன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.