'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! | என் அம்மா அளவுக்கு என்னால் சினிமாவில் சாதிக்க முடியாது : ஜான்வி கபூர் | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு தொடங்கியது! | தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து | பிளாஷ்பேக்: சாதனைத் திரைத் தாரகைகள் சரிதா, ஷோபாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் | பாடல்களில் ஆடியே பிரபலமானேன் என்கிறார் தமன்னா | விரைவில் மறுமணம் செய்யப் போகிறாரா சமந்தா | இவர்கள் தான் எனது ரோல் மாடல் என்கிறார் சாந்தனு | நாளை ஓடிடியில் வெளியாகும் அனுஷ்காவின் காட்டி | கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” |
அடிப்படையில் மலையாளியான வாசுதேவன் மலேசியாவில் பிறந்து வளர்ந்ததால் மலேசியா வாசுதேவன் ஆனார். மலேசிய இசை குழுவில் பாடி வந்த அவர் இளையராஜாவின் அண்ணன் நடத்திய பாவலர் இசை கக்சேரிகளிலும் பாடினார்.
அதன்பிறகு '16 வயதினிலே' படத்தில் இடம் பெற்ற 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' பாடல் மூலம் பின்னணி பாடகர் ஆனார். தமிழில் மட்டும் 8 ஆயிரம் பாடல்களும் பிற மொழிகளில் 4 ஆயிரம் பாடல்களும் பாடினார். 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
ஆனால் அவர் சில படங்களுக்கு இசை அமைக்கவும் செய்திருக்கிறார். உறவுகள், இதோ வருகிறேன், சாமந்தி பூ, பாக்கு வெற்றிலை, ஆயிரம் கைகள், ஆறாவது குறுக்கு தெரு, கொலுசு ஆகிய படங்களுக்கு இசை அமைத்துள்ளார். படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், அவர் இசை அமைத்த பாடல்கள் வரவேற்பை பெறாததாலும் தனியாக இசை அமைப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டவில்லை.