திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த ‛சிக்கந்தர்' படத்தை அடுத்து தற்போது அபூர்வா லக்கியா இயக்கும் ‛பேட்டில் ஆப் கல்வான்' என்ற படத்தில் நடிக்கப் போகிறார் சல்மான்கான். இதையடுத்து மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு பீரியட் திரில்லர் படத்தில் நடிக்கப் போகிறார். 1970 முதல் 1990 வரையிலான காலகட்ட கதையில் உருவாகும் இந்த பீரியட் திரில்லர் படத்தின் கதையைக் கேட்டதும் அதில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளாராம் சல்மான்கான். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பை 2026ம் ஆண்டில் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் மகேஷ் நாராயணன்.