பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
கமல்ஹாசன் அரசியல் கட்சி நடத்தினாலும், சினிமாவிலும் பிஸியாக இருக்கிறார். தக் லைப் படத்தை முடித்துவிட்டார். அடுத்து இந்தியன் 3யில் எஞ்சியுள்ள காட்சிகளில் நடிக்க போகிறார். இதுதவிர சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது அவரது 237வது படம்.
சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகளை செய்தவர் கமல், மவுன படம், டிடிஎஸ் ஆடியோ சிஸ்டம், டிஜிட்டல் சினிமா என சினிமாவின் அடுத்த கட்டத்தை அவரே முன்னெடுத்திருக்கிறார். மக்கள் இன்னும் 10 ஆண்டுகளில் செல்போனில் படம் பார்ப்பார்கள் என்று அவர் சொன்னபோது யாரும் நம்பவில்லை. இப்போது அது நடந்திருக்கிறது.
இனி அடுத்தகட்டமான ஏஐ தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இது குறித்து கற்றுக்கொள்ள அமெரிக்கா சென்று வந்தார். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடந்து வரும் சினிமா தொடர்பான சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி என்ன செய்யலாம் என்று கமல்ஹாசன் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.