Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா

09 ஏப், 2025 - 12:46 IST
எழுத்தின் அளவு:
There-will-be-fights-between-us-too,-it-has-made-me-think-about-separation-Ramba

ஒரு காலத்தில் பிசியான நடிகையாக இருந்த ரம்பா, பின்னர் கனடா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானர். திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அதன் முன்னோட்டமாக விஜய் டி.வி-யில் 'ஜோடி ஆர் யூ ரெடி' ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராகக் களமிறங்கி இருக்கிறார்.

இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: பிசியான நேரத்தில்தான் திருமணம் செய்து கொண்டேன். காரணம் குழந்தை, கணவர் என்ற குடும்ப வாழ்க்கை எனக்கு பிடித்திருந்தது. கனடாவிற்கு சென்றாலும் அங்கு சும்மா இருக்கவில்லை. கணவரின் தொழிலுக்கு உதவியாக இருந்தேன், கிச்சன் டிசைனிங் கோர்ஸ் படித்தேன். எனக்கு 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஆசை இருந்தது. ஆனால் பிறந்த 3 குழந்தைகளும் சிசேரியன் என்பதால் இனி வேண்டாம் என்று டாக்டர்கள் தான் தடுத்து விட்டார்கள்.

நீ விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று கணவர் சுதந்திரம் கொடுத்திருந்தார். அதற்கான நேரம் இப்போது அமைந்திருக்கிறது. குடும்பம் கனடாவில் இருக்கிறது. நான் நடிக்க வந்திருக்கிறேன். தினமும் கணவர் குழந்தைகளோடு வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கிறேன். முன்பே நிறைய வாய்ப்புகள் வந்தது, ஆனாலும் குடும்ப பொறுப்புகள் அதிகமாக இருந்ததால் நடிக்கவில்லை. இப்போது கணவர் 'நீ நடிக்க செல் குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றதால் நடிக்க வந்தேன்.

எங்களை ஒற்றுமையான தம்பதிளாக மற்றவர்கள் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் எங்களுக்குள்ளேயும் சண்டைகள் வந்திருக்கிறது. பிரிவை நோக்கி யோசிக்க வைத்திருக்கிறது. ஆனாலும், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்ததால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை வருடங்களாக வெற்றிகரகமா சென்று கொண்டிருக்கிறது. பிரச்னை வந்தபோது, தூக்கிப் போட்டுட்டு நான் நினைச்சிருந்தா மறுபடி நடிக்கப் போயிருக்கலாம். ஆனால் குடும்பமும் உறவுகளும் தானே நிரந்தரம். என்கிறார் ரம்பா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினிஜெயலலிதாவுக்கு எதிராக குரல் ... சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் சர்வதேச சினிமா தொழில்நுட்ப ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
10 ஏப், 2025 - 07:04 Report Abuse
Senthoora நல்ல இருக்கிறீங்க எதுக்கு நடிக்கவந்து....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in