பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி |

ஆந்திராவை சேர்ந்த யேடி விஜயலட்சுமி, 'ரம்பா' என்ற பெயருடன் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்த அவர் 1983ம் ஆண்டில் 'உழவன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்தார். இந்த படத்தில் தொடை காட்டி நடித்ததால் தொடை அழகி என்று வர்ணிக்கப்பட்டார். அதன் பிறகு தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
2010ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாபன் என்ற தொழிலதிபரை மணந்து கொண்டு செட்டிலானார். தற்போது அவர் 3 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இடையில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குழந்தைகள் வளர்ந்து விட்டதால் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க விருப்பம் கொண்டுள்ளார்.
இதற்காக தனி போட்டோஷூட் நடத்தி உள்ள ரம்பா புதிய கால்ஷீட் மானேஜரையும் நியமித்து வாய்ப்பு தேடத் தொடங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது "சினிமா எப்போதுமே எனது முதல் காதல், மீண்டும் வந்து ஒரு நடிகையாக எனக்கு சவால் விடும் பாத்திரங்களை ஏற்று நடிக்க இதுதான் சரியான நேரம் என்று உணர்கிறேன். புதிய பரிமாணங்களை ஆராய்ந்து பார்வையாளர்களுடன் அர்த்தமுள்ள விதத்தில் என்னை இணைக்க அனுமதிக்கும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன்" என்கிறார் ரம்பா.