லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ரஜினி நடித்த 'கூலி' படம் வெளியாகி நல்ல வசூலையும் கொடுத்தது. அடுத்து அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளிவருகிறது.
ஒவ்வொரு படம் வெளியான பிறகு அடுத்த படம் தொடங்குவதற்கு முன்பு ரஜினி இமயமலைக்கு ஆன்மிக பயணம் செய்வது வழக்கம். உடல்நலக்குறைவாக இருந்த காலத்தில் மட்டும் அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை.
'வேட்டையன்' படம் வெளியாவதற்கு முன், அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். 'கூலி' படம் வெளியாகும் முன்பு இமயமலைப் பகுதியில் மழை அதிகமாக இருந்ததால் அங்கு செல்லவில்லை.
இந்நிலையில் தற்போது ஒருவார கால பயணமாக இமயமலை சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனது நண்பர்களுடன் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற அவர், ரிஷிகேஷ் சென்று சேர்ந்தார். அங்குள்ள ஆசிரமத்தில் தங்கிய ரஜினி நாளை இமயமலை சென்று பாபாவை தரிசித்து விட்டு திரும்புகிறார்.
முன்னதாக இன்று அவர் பத்ரிநாத் கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் அவரது நண்பர்களும் வழிபாடு செய்தனர். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி உள்ளன.