கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு |

71வது தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில் இருதினங்களுக்கு முன் வழங்கப்பட்டன. ஜிவி பிரகாஷ், எம்எஸ் பாஸ்கர், ஊர்வசி, ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல மாநில திரைக்கலைஞர்கள் ஜனாதிபதி கையால் தேசிய விருது பெற்றனர். மலையாள நடிகரான மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
‛நாள் 2' என்ற மராட்டிய படத்திற்காக திரிஷா தோஷர் என்ற 4 வயது குழந்தை, ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் தேசிய விருது பெற்றார். அவர் வயதுக்கு ஏற்ற சேலை அணிந்து வந்து விருது பெற்றார். ஒட்டுமொத்த அரங்கமே அவரை பார்த்து வியந்தது. இந்நிலையில் இந்த குட்டி தேவதைக்கு நடிகரும், எம்பி.,யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல் வெளியிட்ட பதிவில், ‛‛என்னுடைய 6 வயதில் முதல் தேசிய விருதை வென்றேன். அந்த சாதனையை முறியடித்த திரிஷா தோஷருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் மேடம். தொடர்ந்து உங்கள் திறமையை வளர்க்க பாடுபடுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுக்கும் என் பாராட்டுகள்'' என குறிப்பிட்டுள்ளார்.