மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் | முகத்தை காட்டாமல் நடித்து இருக்கும் புதுமுக நாயகன், நாயகி | நிறைய பாலியல் தொல்லை : பாடகி ஜொனிடா காந்தி | விஜயகாந்த் வழியில் பயணிக்கும் சண்முக பாண்டியன் | அஞ்சான் படத்தை ரீ-எடிட் செய்து மீண்டும் ரிலீஸ் செய்யும் லிங்குசாமி | 45வது படத்தில் கடவுள் வேடத்தில் நடிக்கும் சூர்யா | பிளாஷ்பேக்: சொப்பன சுந்தரி யார் தெரியுமா? | ஜூலை 18ல் ரீ ரிலீஸ் ஆகும் நாகசைதன்யா, சமந்தா படம் |
நடிகை மஞ்சிமா மோகன் தமிழில் ‛அச்சம் என்பது மடமையடா, தேவராட்டம், சத்ரியன், களத்தில் சந்திப்போம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் பெரிதளவில் நடிக்கவில்லை.
சமீபத்தில் ‛சுழல் 2' வெப் தொடரில் நடித்து அவரின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு பெற்றார். தற்போது அளித்த பேட்டி ஒன்றில், அவர் கூறியதாவது, " என்னால் திரைக்கதை எழுத முடியாது. ஆனால் படங்களை இயக்க ஆசைப்படுகிறேன். எழுத்தாளர் எழுதும் கதையை திரையில் கொண்டு வர முடியும் என நம்புகிறேன். நான் மக்களை உன்னிப்பாக கவனிப்பவள். திரில்லர் படங்களை இயக்குவது எனக்கு கனவு. மனதில் பல கதைகள் இருந்தாலும் அவற்றை எழுத்தில் வடிக்க முடியவில்லை. அடுத்த 5, 6 ஆண்டுகளில் ஒரு படத்தை இயக்குவேன் என்கிற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது." இவ்வாறு தெரிவித்துள்ளார்.