3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் |
முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களுக்கு பிறகு இயக்குனர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் கடந்த சில வருடங்களாக புதிய படம் ஒன்று உருவாகி வந்தது.
இன்று இப்படத்தை 'இரண்டு வானம்' என தலைப்பு வைக்கப்பட்டதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இதன் பெரும்பாலான படப்பிடிப்பை ஊட்டியில் நடத்தியுள்ளனர். இப்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.
இவர்கள் கூட்டணியில் முதலாவதாக உருவான ‛முண்டாசுப்பட்டி' படம் காமெடியாகவும், இரண்டாவதாக உருவான ‛ராட்சசன்' படம் திரில்லராகவும் வெளிவந்த நிலையில், 3வது படமான ‛இரண்டு வானம்', காதல் கதையாக வெளிவர உள்ளது.