26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பது இன்னும் ஸ்பெஷல். 1965 காலகட்டத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த கதையில் இப்படம் உருவாகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க குரு சோமசுந்தரம் இணைந்துள்ளார். குரு சோமசுந்தரம் ஜோக்கர், மின்னல் முரளி, பாட்டில் ராதா, குடும்பஸ்தன் உள்ளிட்ட பல படங்களில் அவரின் அசாத்திய நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தவிர்த்து மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இயக்குனர் பசில் ஜோசப் என்பவரும் இவர்களுடன் இணைந்து நடித்து வருகிறாராம். இந்த பசில் ஜோசப் அடுத்தபடியாக சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவும் கதை சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




