மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் | முகத்தை காட்டாமல் நடித்து இருக்கும் புதுமுக நாயகன், நாயகி | நிறைய பாலியல் தொல்லை : பாடகி ஜொனிடா காந்தி |
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பது இன்னும் ஸ்பெஷல். 1965 காலகட்டத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த கதையில் இப்படம் உருவாகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க குரு சோமசுந்தரம் இணைந்துள்ளார். குரு சோமசுந்தரம் ஜோக்கர், மின்னல் முரளி, பாட்டில் ராதா, குடும்பஸ்தன் உள்ளிட்ட பல படங்களில் அவரின் அசாத்திய நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தவிர்த்து மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இயக்குனர் பசில் ஜோசப் என்பவரும் இவர்களுடன் இணைந்து நடித்து வருகிறாராம். இந்த பசில் ஜோசப் அடுத்தபடியாக சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவும் கதை சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.