தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
பான் இந்தியா இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு ஒரிசாவில் நடைபெறும் மற்றுமொரு பெரிய படத்தின் படப்பிடிப்பு இது. இது குறித்து ஒரிசா மாநில துணை முதல்வர் பிரவதி பரிதா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“முன்பு, மல்காங்கிரியில் 'புஷ்பா 2', இப்போது பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபுவின் 29வது படத்தில் தென்னிந்திய சூப்பர்ஸ்டார்களான மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன், சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட நடிகை பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கோராபுட்டில் நடைபெற்று வருகிறது.
ஒடிசாவில் திரைப்பட படப்பிடிப்புக்கு ஏராளமான சினிமா நிலப்பரப்புகள் உள்ளன என்பதை இது நிரூபிக்கிறது. இது ஒடிசா சுற்றுலாவுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். இது ஒரு முக்கிய படப்பிடிப்பு இடமாக மாறும். ஒடிசாவின் திறனை ஆராய அனைத்து திரைப்படத் துறைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். மேலும், முழு ஆதரவையும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பையும் தருவோம் என உறுதியளிக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.