வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பான் இந்தியா இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு ஒரிசாவில் நடைபெறும் மற்றுமொரு பெரிய படத்தின் படப்பிடிப்பு இது. இது குறித்து ஒரிசா மாநில துணை முதல்வர் பிரவதி பரிதா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“முன்பு, மல்காங்கிரியில் 'புஷ்பா 2', இப்போது பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபுவின் 29வது படத்தில் தென்னிந்திய சூப்பர்ஸ்டார்களான மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன், சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட நடிகை பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கோராபுட்டில் நடைபெற்று வருகிறது.
ஒடிசாவில் திரைப்பட படப்பிடிப்புக்கு ஏராளமான சினிமா நிலப்பரப்புகள் உள்ளன என்பதை இது நிரூபிக்கிறது. இது ஒடிசா சுற்றுலாவுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். இது ஒரு முக்கிய படப்பிடிப்பு இடமாக மாறும். ஒடிசாவின் திறனை ஆராய அனைத்து திரைப்படத் துறைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். மேலும், முழு ஆதரவையும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பையும் தருவோம் என உறுதியளிக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.