சசிகுமாரின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள் வரிசை | சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஷாருக்கானின் கிங் பட வாய்ப்பை இழந்த நயன்தாரா | பயங்கரவாத தாக்குதலால் ‛தி பிக் பாலிவுட் ஒன்' நிகழ்ச்சியை தள்ளிவைத்த சல்மான் | அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த சூர்யா | ரெயின்போவை ரசிக்கும் மகன்கள் : நயன்தாரா | சமரச உடன்பாடு : நடிகர் தர்ஷன் மீதான வழக்கு தள்ளுபடி | தொடரும் பட சண்டைக்காட்சிகளுக்கு வரவேற்பு : நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன ஸ்டண்ட் சில்வா | பஹத் பாசிலை தொடர்ந்து நிவின்பாலியை இயக்கும் அகில் சத்யன் | 40 நாள் திட்டமிட்டு முன்கூட்டியே நிறைவடைந்த பிரணவ் மோகன்லால் படம் |
தமிழில் விஜய் நடித்த 'தெறி, மெர்சல், பிகில்', ஹிந்தியில் ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படங்களை இயக்கி இந்திய அளவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தவர் அட்லி.
அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை என்றாலும் படத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது என்கிறார்கள். இப்படத்தின் தோற்றத்திற்காக அல்லு அர்ஜுன் மும்பை சென்று மேக்கப் டெஸ்ட்களை மேற்கொள்வதாகவும் செய்திகள் வந்துள்ளது.
மிக விரைவில் ஒரு வருட காலத்திற்கும் குறைவாக இந்தப் படத்தை எடுத்துத் தருகிறேன் என அட்லி உறுதியாக சொல்லியுள்ளதால் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் சம்மதித்ததாகத் தகவல். இந்தப் படத்தை தமிழில் உள்ள தயாரிப்பு நிறுவனம் ஒன்றுதான் தயாரிப்பதாக இருந்ததாம். ஆனால், அட்லி அவருடைய சம்பளம் 100 கோடி என்று சொன்னதால் பின்வாங்கிவிட்டார்களாம். அப்படி அட்லி அந்த சம்பளம் வாங்கிவிட்டால் தமிழ் இயக்குனர்களில் அதிக சம்பளம் பெறும் இயக்குனர் என்ற முதலிடத்தைப் பிடிப்பார். அவரது குருநாதரான ஷங்கர் கூட இவ்வளவு சம்பளம் வாங்கியல்லை.
தற்போது தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்தப் படத்தைத் தயாரிக்க முன் வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.