லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் பூரி ஜெகன்னாத். “பத்ரி, அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி, போக்கிரி, பிசினஸ்மேன், ஐஸ்மார்ட் சங்கர்” உள்ளிட்ட பல தெலுங்குப் படங்களை இயக்கியவர். சிம்பு நடித்த 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. தொடர்ந்து பல தெலுங்குப் படங்களிலும் நடித்தார்.
பின்னர் இயக்குனர் பூரியுடன் இணைந்து திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டார் சார்மி. பூரி இயக்கிய ஏழு படங்களில் சார்மியும் இணை தயாரிப்பாளர்.
2022ல் பூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்த 'லிகர்' படம் படுதோல்வியைத் தழுவியது. கடந்த வருடம் அவர் இயக்கிய 'டபுள் ஐஸ்மார்ட்' படமும் தோல்வியைத் தழுவியது. இதனால், தெலுங்கு நடிகர்கள் யாரும் பூரியின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் காட்டவில்லை.
மீண்டும் வெற்றி கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் தற்போது நான்கைந்து கதைகளை எழுதி வைத்திருக்கிறாராம் பூரி. ஆனால், அவர் படத்தில் நடிக்க வேண்டுமென்றால் சார்மி இணை தயாரிப்பாளராக இருக்கக்கூடாது என சில நடிகர்கள் 'டிமாண்ட்' வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதனால், பூரி, சார்மி நட்பில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.