நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பூரி ஜெகன்னாத். அவருடைய சினிமா தயாரிப்பில் நடிகை சார்மியும் ஒரு பங்குதாரராக இருக்கிறார். அவர்கள் கடைசியாகத் தயாரித்த 'லைகர், டபுள் ஐஸ்மார்ட்' ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. பூரி இயக்கிய ஏழு படங்களில் சார்மி இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார்.
தொடர் தோல்விகளால் தவித்த பூரி, தெலுங்கில் சில நடிகர்களை சந்தித்து தனது அடுத்த படத்தில் நடிக்க கோரிக்கை வைத்துள்ளார். அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்றால் சார்மி இணை தயாரிப்பாளராக இருக்கக் கூடாது என அவர்கள் சொன்னதாகத் தகவல் வெளியானது.
அதன்பின் தமிழ் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு கதையைக் கூறியிருக்கிறார் பூரி. கதை பிடித்துப் போன விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளார். பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது. ஜுன் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இப்படத்திற்கான பத்திரிகை செய்தியை நேற்று வெளியிட்டார்கள். அதில் இணை தயாரிப்பாளராக சார்மி இருப்பதும், புகைப்படத்தில் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி இருப்பதும் பூரி மற்றும் சார்மி தங்களது தயாரிப்பு நட்பை இன்னமும் தொடர்கிறார்கள் என்பதை தெரிய வைத்துள்ளது.