பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை | இன்ஸ்டாகிராம் புரமோஷனை கூட தவிர்க்கும் இளம் நடிகை ; இயக்குனர் விரக்தி | முடக்கப்பட்ட எக்ஸ் தளத்தை மீட்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா கோஷல் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி தொடர் கடந்த 2020ம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்து கிட்டத்தட்ட 1200 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக கடந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த சீரியெலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக சின்னத்திரை வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. அத்துடன் தொடரின் நாயகன் சதீஷும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பாக்கியலெட்சுமி என்கிற பப்ளிக் எக்ஸாம் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது. நான் பாஸா பெயிலா? என்பது ரசிகர்கள் உங்கள் கையில் தான் இருக்கிறது. மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்துவிட்டேன். ஆனாலும், தொடர்ந்து முயற்சிப்பேன்' என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் பாக்கியலெட்சுமி தொடர் முடிவுக்கு வருவது உறுதியாகிவிட்டது.